இலங்கை வட மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்!

இலங்கை வட மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்!

இலங்கை வட மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்!

இலங்கையின் வட மாகாணத்திற்கான ஆளுநராக, தமிழரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை (07.01.2019) சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுமானிப்பட்டத்தை நிறைவு செய்த அவர், “இனத் தேசியவாதத்தில் மதத்தின் பங்கு” என்ற தலைப்பின் கீழ் தனது, தனது முனைவர் பட்ட ஆய்வினை அதே பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார்.

2008 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மடிசன் அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட புலமைப் பரிசில், மற்றும் கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் ஆகியவற்றையும் முனைவர் சுரேன் ராகவன் பெற்றுள்ளார்.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பௌத்த கற்கைகளுக்கான ஒக்ஸ்ஃபோர்ட் நிலையத்தில், ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேன், பல ஆண்டுகள் அங்கு ஆய்வுச்செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

இலங்கையின் நேரடி அரசியல் விவகாரங்களில் பல்லாண்டு கால அனுபவம் கொண்டவராக கூறப்படும் அவர், இலங்கை அரசங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய தரப்புகளுக்கு இடையேயான சமாதான உடன்படிக்கைத் தருணங்களிலும், இலங்கையின் அரசியல் மறுசீரமைப்பிலும் பங்கு கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: