இந்து விவகார துணை அமைச்சராக முஸ்லிம் நியமிக்கப்பட்டதால் யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்து விவகார துணை அமைச்சராக முஸ்லிம் நியமிக்கப்பட்டதால் யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்து விவகார துணை அமைச்சராக முஸ்லிம் நியமிக்கப்பட்டதால் யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் இந்து சமய விவகார துணை அமைச்சராக இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நல்லூர் கோயிலின் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


அகில இலங்கை சைவமகா சபையினால் நடத்தப்பட்ட இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்கு முன்பாக ஒன்று கூடிய அவர்கள், அமைதியான முறையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இலங்கையில் இரண்டு ராஜாங்க அமைச்சர்களும் 5 துணை அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.

இதில் ஒரு துணை அமைச்சரின் நியமனம் இங்கு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நியமிக்கப்பட்ட கே. காதர் மஸ்தான் என்பவர் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி (வளர்ச்சி) மற்றும் இந்து மத விவகாரம் ஆகியவற்றுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்து மத விவகாரத்தை கவனிக்க ஒரு முஸ்லிமை பதவியேற்கச் செய்துள்ளது இலங்கையில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரம் ஆகியவற்றுக்கான அமைச்சராக டி. எம். சுவாமிநாதன் என்கின்ற இந்து மதத்தவரே இருக்கின்ற போதிலும் அவருக்கு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மாற்று மதத்தை சேர்ந்தவராக இருப்பது குறித்து பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பலர் இர் பற்றி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். இதுதான் நல்லாட்சி என்றும், இதுதான் மத நல்லிணக்கம் என்றும் இதுதான் நல்லாட்சி அரசாங்கத்தால் கூறப்பட்ட விஞ்ஞான முறையிலான அமைச்சரவை என்றும் பலர் ஏளனம் செய்துள்ளனர்.

இதற்கு இந்துக்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அமைச்சரின் நியமனத்திற்கு எதிராக யாழில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் காதர் மஸ்தான் நியமனத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: