சம்பந்தன் பதவி பறிக்கப்பட்டது- இலங்கையில் எதிர்க்கட்சி தலைவரானார் ராஜபக்சே!

சம்பந்தன் பதவி பறிக்கப்பட்டது- இலங்கையில் எதிர்க்கட்சி தலைவரானார் ராஜபக்சே!

சம்பந்தன் பதவி பறிக்கப்பட்டது- இலங்கையில் எதிர்க்கட்சி தலைவரானார் ராஜபக்சே!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலக நேர்ந்தவருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில் இருந்து அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி வெளியேறுவதாக திடீரென அறிவித்தார். தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி உத்தரவிட்டார். மேலும், நாடாளுமன்றத்தையும் முடக்கிய அவர், ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிபரின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து கூடிய நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனையடுத்து, பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து பிரதமராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், இலங்கையில் கடந்த 51 நாட்களாக நீடித்த அரசியல் குளறுபடி முடிவுக்கு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு முதல் எதிர்க்கட்சிகளின் தலைவராக இருந்து வந்த ஆர்.சம்பந்தனுக்கு மாறாக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமராக ரணில் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நாடாளுமன்றம் கூடியது. இதில் சபாநாயகர் கரூ ஜெயசூர்யா, எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்படுவதாகவும், ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பெற்றுள்ள கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும் என்ற அடிப்படையில் ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்.

ஆனால், ராஜபக்சே சமீபத்தில் மற்றொரு அரசியல் கட்சியில் இணைந்ததால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கக் கூடாது என்று தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த சுமன்திரன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரப் ஹக்கீம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா, உறுப்பினர்கள் தங்கள் ஆட்சேபனைகளை எழுத்து மூலமாக தெரிவிக்கும்படியும், அப்போது தான் தேர்வு குழு அது குறித்து ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: