2000 ஆண்டுகள் பழமையான ‘அரக்கர்கள்’ கல்வெட்டு கண்டுபிடிப்பு!

2000 ஆண்டுகள் பழமையான 'அரக்கர்கள்' கல்வெட்டு கண்டுபிடிப்பு!

2000 ஆண்டுகள் பழமையான ‘அரக்கர்கள்’ கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேசத்தில் 2000ம் ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

வரலாறு குறித்த சுதந்திர ஆய்வுகளை முன்னெடுத்துவரும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் தொல்பொருள் குறித்த ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் திம்புலாகல பிரதேசத்தில் ஆய்வுகளை நடத்திய போது, 2000 ஆண்டு பழமையான கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த கல்வெட்டு குறித்து பல்கலைக்கழக மாணவன் மொஹான் பிரசாத் கூறுகையில், “இலங்கையில் இது வரையில் யாரும் கண்டுபிடிக்காத 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை ஆய்வு செய்த போது, அது அரக்கர்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவது தெரிகிறது. அரக்கர்கள் குறித்து கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்வெட்டு இது என தொல்பொருள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: