‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பெறுமிதம்!!!

‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பெறுமிதம்!!!

‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பெறுமிதம்!!!

சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் என்று சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதியளித்தார்.

கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் அப்போதைய அமைச்சர் யாக்கூப் இப்ராஹிமுக்குப் பதிலாக தொடர்பு, தகவல் அமைச்சராகப் பொறுப்பேற்றார் திரு எஸ். ஈஸ்வரன். மேலும் வர்த்தக தொழில் அமைச்சில் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் திரு ஈஸ்வரன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். அத்தகைய மரியாதையை அந்நாட்டில் தமிழ்மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளிலும் தமிழ் தாய்மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது.

அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகளிலும் தமிழ்மொழி அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் கரன்சியிலும் ஆங்கிலம், சீனா, மலேய் ஆகிய மொழிகளோடு தமிழ்மொழியும் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூரை நவீனமாக்கிய தமிழ் சமூகத்தினர்” என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடந்தது. இந்த நூலை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இந்த நூலை வெளிநாடு வாழ் இந்தியர் சவுந்திர நாயகி வைரவன் எழுதியுள்ளார்.

இந்த நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் பேசுகையில், சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு தீர்மானம் கொண்டுள்ளது.

அதனால்தான் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும் பள்ளிக்கூடங்களிலும் பயிற்று மொழியாகவும் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதில் அரசு கொள்கையாக வகுத்துள்ளது. இந்த நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தினர், குறிப்பாக இளைஞர்களிடம் தமிழ்மொழியை கொண்டு சேர்த்து, அன்றாட வாழ்க்கையில், பயன்பாட்டு மொழியாக்கி உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.

தமிழ்மொழியை பரப்புவதற்கும், தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றவும் இளைய சமூகத்தினரிடம், விழிப்புணர்வையும், அவர்களின் பங்களிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். அதற்காக தமிழ்மொழித் திருவிழாவை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த நூலில் சிங்கப்பூருக்கு தமிழர்கள் எப்படி வந்தார்கள், எந்த ஆண்டில் வந்தார்கள், சிப்பாய்களாக, கூலித்தொழிலாளர்களாக, வர்த்தகர்களாக, கடன்கொடுக்கும் நபர்களாக, அரசு அதிகாரிகளாக உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் எப்படி வந்தார்கள் என்பதை விளக்குகிறது.

மேலும், 1787-ம் ஆண்டில் இருந்து சுமத்ரா தீவின் பென்கூலன் இடத்துக்கும், மலேசியாவின் பென்னாங் பகுதிக்கு 1790-ம் ஆண்டில் இருந்தும் தமிழர்கள் அனுப்பப்பட்டதையும் எடுத்துக் கூறுகிறது.

சிங்கப்பூரில் கட்டிடங்கள் கட்டவும், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் தமிழர்களை ஆங்கிலேயர்கள் அழைத்து வந்தவிதம், அவர்களை பயன்படுத்திய விதம் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழர்களின் குணம், அவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, தலைமைக்கு வணங்கி இருத்தல், ஆகியவற்றை ஆய்வுகளுடன் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் சிங்கப்பூர் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்தது. அந்த வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. இதன் காரணமாகவே, சிங்கப்பூரின் அதிபராக தமிழர் செல்லப்பன் ராமநாதன் என்ற எஸ்ஆர் நாதன் 1999-ம் ஆண்டு முதல் 2011 ஆகஸ்ட் 31-ம் தேதிவரை அதிபராக பதவி வகிக்க முடிந்தது. மேலும், இன்றும் சிங்கப்பூரிலும் என்னற்ற தமிழர்கள் அரசுப் பதவிகளிலும், அமைச்சர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் இருந்து வருகிறார்கள். இதை அழகாக, நேர்த்தியாகவும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: