“விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே” – மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா!

"விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே" - மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா!

“விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே” – மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசியாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்காக போராடிய சுதந்திர போராளிகளாக புலிகளின் உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பு என முத்திரை குத்துபவர்களுக்கே தாம் இதனை நினைவுபடுத்துவதாகவும் சிவராஜா தெரிவித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அவர்கள், தமது உரிமைகளுக்காக போராடும் ஏனைய சுதந்திரப் போராளிகளைப் போன்றோர்கள் என கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவின் பினாங் மாநில முதலமைச்சரான பேராசிரியர் பி. ராமசாமி புலிகளுக்கு ஆதரவானவர் எனத் தெரிவித்து அவரைக் கைது செய்யுமாறு அங்குள்ள சில முஸ்லிகள் வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், மலேசியாவின் பினாங் மாநில துணை முதலைமைச்சரான பேராசிரியர் பி. ராமசாமிக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லை என அதன் முன்னாள் உறுப்பினரும், சமாதான பேச்சாளருமான விசுவநாதன் ருத்ரகுமரன் தெரிவித்துள்ளார்.

விசுவநாதன் ருத்ரகுமாரன் தற்போது நிவ்யோர்க்கில் சட்ட பயிற்சி பெற்று வருகின்றார். இந்த நிலையில், அவர் கடந்த 28ஆம் தேதி ராமசாமிக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் மோதல் இடம் பெற்றபோது, சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்பு விவகார குழுவின் உறுப்பினராக ராமசாமி இருந்தார் என குறித்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கம், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இந்தநிலையில், குறித்த குழுவின் இணைப்பாளராக தாம் செயற்பட்டதாக தெரிவித்துள்ள ருத்ரகுமாரன், இலங்கையின் சட்டதரணி ஒருவரும், பேராசிரியர் ராமசாமியும் குழுவில் அங்கம் வகித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், சட்டத்தரணியும், ராமசாமியும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என ருத்ரகுமாரன் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மலேசிய மக்களவையில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என freemalaysiatoday.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: