அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்!

அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்!

அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்!

அமெரிக்காவில், ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்ற மாணவி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். இவர், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஹச்.டி படிப்பு படித்து வருகிறார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இந்த நிலையில், அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும், “2018 Marconi Society Paul Baran Young Scholar” இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நீரில் மூழ்கிய பொருள்களை ஒலி அலைகளைக் கொண்டு கண்டுபிடிக்கும் “சோனார்” தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவது தொடர்பான தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தின் மூலம், ஒருவரது உடலைத் தொடாமலேயே, அவர்களது உடலில் ஏற்படும் செயல்பாடுகளைக் கண்டறிய முடியும். உடல் சார்ந்த பிரச்னைகளை ஸ்மார்ட்போன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை ராஜலட்சுமி கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்பு மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப உலகுக்கு உதவிக்கரமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

டாக்டர் வின்டன் செர்ஃப், மார்கோனி சங்கத்தின் தலைவர் மற்றும் `இன்டர்நெட் தந்தை’ என அழைக்கப்படும், `இளம் அறிஞர்’ விருது உலகின் சிறந்த இளம் தகவல் தொடர்பு ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கிறது’ என்று கூறினார். இளம் அறிஞர் விருதுடன் இந்திய ரூபாய் மதிப்பில் 3,63,425 ரூபாய் ரொக்க பரிசையும் பெறுகிறார் ராஜலட்சுமி நந்தகுமார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: