Monthly Archives: November 2019
ரஷ்யாவில் நடந்த சர்வதேச ஏரோபிக் ஃபிட்நஸில் வெள்ளி பதக்கம் தமிழக மாணவி!
சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரஜா (17), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்து வருகிறார். 8-ம் வகுப்பில் இருந்தே, ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டிக்கு சுப்ரஜா தயாராகி வந்துள்ளார். மாவட்ட, மாநில அளவில் பதக்கங்களை குவித்த சுப்ரஜா, தேசிய… Read more
200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து தங்கக் காசு வெளியிட்ட எல்லீஸ் துரை!
200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்டது ஆங்கிலேய ஆட்சியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் 1812-ல் தென்னிந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்று… Read more
தமிழகத்துக்கு ‘உலக வேளாண் விருது’ – வேளாண் துறைக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து!
இந்திய உணவு மற்றும் வேளாண் வர்த்தக அமைப்பு சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட சிறந்த வேளாண் மாநிலத்துக்கான ‘உலக வேளாண் விருதை’ முதல்வர் பழனிசாமியிடம் காண்பித்து அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு மற்றும் அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு :… Read more
காளையார் கோவில் அருகே சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
காளையார் கோவில் வட்டம் கொல்லங்குடியை அடுத்த வீரமுத்துப்பட்டி செங்குளி வயலில், பழமையான எழுத்துகள் உள்ள ஒரு கல்வெட்டு கண்டுபிடிப்பு. இதையடுத்து அங்கு சென்ற தொல்லியல் ஆய்வாளர்கள் களஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த கற்கள் சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன… Read more
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலம்; மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு 52 அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெருவுடையாருக்கு 48 திரவியங்களால் பெரும் அபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,034-வது ஆண்டு… Read more
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து விலகினார் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரொலோ) அமைப்பின் தவிசாளர் பதவியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் விலகியுள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தாவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்… Read more
‘கீழடி அருகே தொல்லியல் தோட்டம்’- தொல்லியல் ஆர்வலரின் புதிய முயற்சி!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும் ஆயிரக்கணக்கான பொருள்கள் எடுக்கப்பட்டன. இவற்றைப் பொதுமக்கள் எப்போதும் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று… Read more
40 ஆண்டுகள் ஆய்வு செய்து திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா!
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்ததாக அவரது மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் யார் என்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் விநாயக் வே.ஸ்ரீராம் கூறியதாவது:… Read more
உலக ராணுவ தடகளத்தில் 3 தங்கம் வென்ற ஆனந்தனுக்கு கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு!
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு என்று உலக ராணுவ தடகளப் போட்டியில் பாரா பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற குணசேகரன் ஆனந்தன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (32). இவர், கடந்த 2005-ல் இந்திய ராணுவத்தில்… Read more
திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதி பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மை மற்றும் சாணியை பூசி அவமதித்துள்ளனர். ஐயன் வள்ளுவன் சிலையை அவமதித்தது, தமிழ் மொழி மற்றும் ஒட்டு மொத்த உலகத் தமிழர்களை அவமதித்தது போலாகும்…. Read more