Monthly Archives: January 2019
ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் கண்டுபிடிப்பு!
ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்களும், கொற்றவை சிற்பம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், ஆசனாம்பட்டு அருகில் ஒரு தோப்பில் எழுத்துடைய மூன்று நடுகற்கள் ஆய்வு செய்யப் பெற்றன. அவற்றில் இரண்டு நடுகற்கள் கம்பவர்மன்… Read more
இலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி!
ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்… Read more
வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த காசிமணி, திருக்கோயிலூர் ஓய்வுப் பெற்ற தலைமையாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான க. நடராஜனுக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, நடராஜன், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி… Read more
அழகாக தமிழ் பேசி அசத்திய சீனப் பெண் செல்வி. சொ சின் (Zhou Xin)-னுடன் உலகத் தமிழர் பேரவையின் திரு. அக்னி சந்திப்பு!
“என்னுடைய தமிழ் பெயர் ஈஸ்வரி. சீனா வானொலியில் தமிழ் அறிவிப்பாளராக நான் பணியாற்றினேன். நான் தற்போது சீனா-வின் பெய்ஜிங் நகரத்தில் உள்ள சீன நாட்டின் அயல் மொழிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக் கல்வி, தமிழாய்வுத் துறையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி… Read more
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் அறிவித்துள்ளார் அம்மாநில கவர்னர் ராய் கூப்பர்!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை, மாநிலத்தின் தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் பிரகடனம் செய்து, அந்த மாநில கவர்னர் ராய் கூப்பர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய… Read more
பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது! 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது!
இந்தியாவில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை இந்திய அரசு 25-01-2019… Read more
ஜவ்வாது மலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்!
ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கள ஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது. இது 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக்… Read more
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மாதிரிகள் ஆய்வுக்கு அமெரிக்கா செல்கிறது!
இலங்கை மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மனித உடலுறுப்பு மீதங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக இன்று வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த மாதிரிகள் அடங்கிய பொதி, மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன்… Read more
வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சக்திகளை தமிழர்கள் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்!
இந்தியாவின் தேச பிதாவாக நினைக்கப்படுபவர், மகாத்மா காந்தி. தேச விடுதலைக்காக உழைத்த பெயரை வைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியை பின்னர் தவறாக யாரும் பயன்படுத்த கூடாது என்பதற்காக, இந்தியா விடுதலையானதும் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்றார். ஆனால், இந்திய… Read more
உலக மொழிகளில் தமிழின் தாக்கம்!
ஜப்பான் மொழி மட்டுமல்ல, கொரிய மொழியில் அம்மா -வை, “அம்மே” அப்பா-வை, “அப்பே” என்றும், அதே கொரிய மொழியில் தமிழின் தாக்கம் அதிகமாக இன்றும் காணக்கூடியதாக இருந்து வருகிறது. பூட்டானியர் பேசும் சோங்கா என்ற மொழியில் தாய்-தந்தையை அம்மா-அப்பா என்றும், செல்வத்தை… Read more