Monthly Archives: April 2018
‘சொன்ன மாதிரியே என் மகன் கலெக்டர் ஆகிட்டான்!’ – கீற்றுப் பின்னும் ஏழைத் தாயின் ஆனந்தம்!
‘நான் படிச்சு கலெக்டர் ஆகிடுவேன்ம்மா அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டபட வேண்டாம் என என் மகன் படிக்கும் போது சொல்லி கொண்டிருப்பான். சொன்னது போலவே செஞ்சுட்டான்’ என தன் மகனை நினைத்து பெருமிதமாக சொல்கிறார் கீற்று பின்னும் கூலி தொழிலாளி… Read more
கீழடியில் அகழாய்வு பணி தீவிரம்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் அகழாய்வு பணி தீவிரம் அடைந்துள்ளது.மதுரை அருகே உள்ள, கீழடியில், 2015ல், மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து, மூன்று கட்ட அகழாய்வு நடத்திய பின், அதை நிறுத்தியது. அகழாய்வு… Read more
யூபிஎஸ்சி தேர்வில் மாநில அளவில் முதலிடம்!- தருமபுரி மாணவர் கீர்த்திவாசன் சாதனை!
யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன், இந்திய அளவில் 29-வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். கீர்த்திவாசன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் தெருவைச் சேர்ந்தவர்…. Read more
தூத்துக்குடியில் 17-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கால சதிகல் கண்டுபிடிப்பு!
துாத்துக்குடி மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில், நாயக்கர் கால சதி கல் ஒன்று தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ளது சங்கம்பட்டி கிராமம். இங்கு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சதிகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் போரில், வீர… Read more
1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்!
திருச்சிக்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலிங்குப் பாலம் ஒன்று, சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் ஒன்றின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க முனையும் பார்த்திபன், முருகன், வினோத் ஆகியோர் கண்டுபிடித்து… Read more
ஏற்காடு அருகே 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆநிரைகளைக் காத்த வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே ஓலக்கோடு என்ற இடத்தில் 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துடன் கூடிய நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வீரராகவன், ஆறகழூர் பொன் வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏற்காடு… Read more
ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொள்ளப்பட்ட புனித நாள் (22.04.2000)!
ஆனையிறவுப் படைத் தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கு எதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம்… Read more
இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு?- பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் முன்னணி!
இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக, இந்தியாவைச் சேர்ந்தவரும், முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவருமான ரகுராம் ராஜன் தேர்வு செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பேங்க் ஆப் இங்கிலாந்து அடுத்த கவர்னரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருக்கும்… Read more
‘ரயில்வே டிக்கெட்டில் தமிழ்’- 4 நகர ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது!
தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறுகிறது. சோதனை ஓட்டமாக ஒரு சில ரயில் நிலையங்களில் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இந்த வார இறுதியில் இருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும்… Read more
தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – சீ.வி.கே.சிவஞானம்!
பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரோஸ் பட்டியலில் ஒரு குழுவை உருவாக்கி அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார். அந்த குழுவில் நானும் இருந்தேன் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் “ஓர் இனப்பிரச்சினையும், ஓர்… Read more